நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சானிக் ஆல்பம் 3சி ஹோமியோபதி மருந்தை செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் கொத்திமங்களம், மதுராந்தகம் வட்டம் ஒழப்பாக்கம், கீழ்மருவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதி சாலமங்கலம், லட்சுமி நகர், படப்பை, பெரியார் நகர், கரசங்கால் சத்யசாய் நகர், அம்பேத்கர் நகர், மலையாளி நகர் ஆகிய கிராமங்களில் முகாம்கள் நடத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. மருத்துவர்கள் அ.பாலகுமார், வி.எ.ஜவகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், செயலாளர் க.புருசோத்தமன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் வா.பிரமிளா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் முகமது உசேன், மருதன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.