ஜப்பான் கார்நிறுவனமான டொயோட்டா, வரும் 2020முதல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு மக்களிடையே அதிக அளவில் உள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய பெருமளவு ஆர்வம் காட்ட துவங்கிவிட்டன. ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் டொயோட்டா நிறுவனம் வருகிற 2020-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை முழுவீச்சில் முன்னெடுக்க உள்ளது.
ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா வரும் 2025-ம் ஆண்டுக்குள் புதிதாகப் பத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களை சந்தையில் இறக்கிவிட குறிக்கோள் வைத்துள்ளது. இதுகுறித்த செய்தி அறிக்கையில், “BEV என்னும் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை சந்தையில்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன தரத்தை முன்னெடுப்பதிலும் பேட்டரி மறுபயன்பாடு செய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.