business

img

ஆலை மூடலை அறிவித்த டொயோட்டா, ஹீரோ கம்பெனிகள்....

புதுதில்லி:
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாகடொயோட்டா, ஹீரோ உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை நிறுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

2020-ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, மார்ச் 25 அன்று நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. வாகன உற்பத்தி, விற்பனை அப்போது கடுமையாக பாதிக்கப்பட்டது.பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பத் தொடங்கியதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முழு வேகத்தில் செயல்படத் தொடங்கின. ஆனால், தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத்துவங்கியிருப்பது, ஆட்டோமொபைல் நிறுவனங்களை மீண்டும் நெருக்கடியில்தள்ளியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது நான்கு உற்பத்தி ஆலைகளையும் மே 1 முதல் தற்காலிகமாக இழுத்து மூடியுள்ளது. மே 15 வரை ஆலைகள் மூடியிருக்கும் என்று கூறியுள்ளது. ஒருவேளை கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்தால், மே 15-க்கும் பிறகும் ஆலைகளைத் திறக்க வாய்ப்பிருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோல இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதிசுஸூகி-யும் ஹரியானா மாநிலத்தில் உள்ள தனது உற்பத்தி ஆலையை மூடியுள்ளது. ஆலை மூடியிருக்கும் இந்த நாட்களில் நிறுவனத்தின் பராமரிப்புவேலைகள் முடிக்கப்படும் என்று மாருதி சுஸூகி நிறுவனம் கூறியுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் ஏப்ரல் 14 முதல் மே 14 வரையில் தனதுஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. எம்.ஜி. மோட்டார் நிறுவனம் குஜராத்தில்உள்ள தனது ஆலையை ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை மூடுவதாகஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.