tamilnadu

img

சாத்தான்குளம் வணிகர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும்!

சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் லாக் அப்பில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், நீதி கோரியும் தமிழகம் முழுவதும் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர். (செய்தி 3)