“இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாறு அனைத்துமே வர்க்கப் போராட் டங்களின் வரலாறே!”- அதுவரை யிலும் கேட்டிராத இத்தகையதொரு புதிய விளக்கத்தை அந்த புத்தகம் முன்வைத்த போது உண்மையிலேயே உலகம் அதிர்ந்து தான் போனது.. ஆகவே தான் அப்போது ‘போப்’ ஆக இருந்த ஒன்பதாம் பயஸூம், ஜார் மன்னனான முத லாம் நிக்கோலசும், ஆஸ்திரிய இளவரசர் மெட்டர்னிஹூம், பிரெஞ்சு பிரதமர் ஃபிரான்ஸூ வா கிஸொவும், ஜெர்மன் போலீசாரும், பிரெஞ்சு மிதவாதிகளும் என அனைவரின் கூற்றுக்களும் “ஐரோப்பாவை கம்யூனிசம் எனும் பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கி றது” என்பதாகவே இருந்தது. ஏனெனில் இந்த ‘புனிதக் கூட்டணி! (?)’ இயல்பாக, அச்சமடைவ தற்கான விஷயங்களைத்தான் அந்த புத்தகம் தனது உள்ளடக்கமாக கொண்டிருந்தது. அந்த புத்தகம்தான்மாமேதைகள் மார்க்சும், பிரட்ரிக் ஏங்கெல்சும் கூட்டாக வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’.
“ உலகத்தை பலரும் வியாக்யானம் செய்தி ருக்கிறார்கள்.. நமது வேலையோ நாம் விரும்பி யபடி உலகை மாற்றியமைப்பதே.” எனும் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளோடு சமூ கத்தை பகுப்பாய்வு செய்திருந்த அந்த புத்தகத்தைப் போல இன்னொரு நூலை உலகம் அதற்கு முன்பும், பின்பும் இதுவரையிலும் கண்டதில்லை. “திடமானது அனைத்து காற்றில் கரைகின்றன; புனிதமானது என நம்பப்பட்ட அனைத்தும் புனிதம் இழக்கின்றன” என அங்கதச் சுவையோடும், அதுவரையிலும் பின் பற்றப்பட்ட போலியான நம்பிக்கைகளை கட்டு டைத்ததாகவும் அந்த நூல் விளங்குகிறது.
“நவீன உலகில் உற்பத்தி கருவிகளை சொந்தமாக கொண்டிருக்கும் முதலாளிகளும், உழைப்பு சக்தியை தவிர வேறு எதையும் கொண்டிருக்காத பாட்டாளிகளும் எதிரெதிர் முனைகளில் உள்ள வர்க்கங்களாய் விளங்கு கின்றனர்.. இவற்றிற்கிடையே நடக்கும் போராட்டம் தான் இன்று முதன்மையான போராட்டமாக உள்ளது” எனத் துல்லியமாக வர்ணிக்கும் மார்க்சும், ஏங்கெல்சும் “அடி மூலத்திலேயே விலங்கிடப்பட்ட வர்க்கமான (Class with Radical Chains) பாட்டாளி வர்க்கம் தான் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தும்” எனக் கணித்த தோடு “நாம் இழப்பதற்கு ஏதுமில்லை நம்மைப் பூட்டியிருக்கும் சங்கிலிகளைத் தவிர.. ஆனால் அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என அந்த வர்க்கத்திற்கான அறைகூவலாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்வைக்கி றார்கள்.
“உழைப்பு சக்தியை பெற்றுக் கொள்ளும் முதலாளித்துவம் அதற்கு ஈடானதொரு கூலியை அளிக்கிறது. ஆனால் கூலி அளிக்கப்படாத தொரு உழைப்பையும் உறிஞ்சிக் கொள்கிறது. அதுவே உபரி உழைப்பாகவும், மூலதனக் குவிப்பாகவும் மாறுகிறது” என முதலாளித்து வத்தின் சுரண்டலை தோலுரித்துக் காட்டிய தோடு, “இத்தகைய உழைப்புச் சுரண்டலில் மானுடம் தன்னை முழுமையாக இழந்து நிற்கிறது.. எனவே மானுடத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தலைமை தாங்குவதன் மூலமே தொழிலாளி வர்க்கம் தன்னையும் விடுவித்துக் கொள்ளும்” எனும் அறிவியல் உண்மையையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பறைசாற்றுகிறது.
மேலும் கற்பனைகளிலும், மேலெழுந்த வாரியான விடியல்களுக்கான கனவுகளிலும் மூழ்கிக் கிடக்காமல் பாட்டாளிகளுக்கான அரசியல் அதிகாரத்தை உறுதி செய்யவும், சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை தலை மையேற்கவும் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என அறைகூவலையும் விடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விடுக்கும் இத்தகைய அறைகூவல் மிக மிக முக்கிய மானதாகும். ஏனெனில் வெறும் அமைப்பு ரீதியான திரட்டல்களுக்கான அறிவிப்பு அல்ல இது; மாறாக சுரண்டலற்ற, உயர்வானதொரு சோஷலிச சமூகத்தை கட்டியமைக்க முடியும் என்ற கருத்தியல் தளத்திலான தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்துவதே இந்த அறைகூவலின் அடிப்படை ஆகும்..
அரசியல் நூல்களில் ரூசோவின் சமுதாய ஒப்பந்தம், அமெரிக்காவின் அரசியல் சாசனம், பிரெஞ்சு தேசத்தின் உரிமைப் பிரகடனம் எனும் குறிப்பிடத்தகுந்த நூல்களை விட காத்திர மான அரசியல் நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பதோடு, நவீன உலகத்தை உரு வாக்கியதில் இதன் வரலாற்றுப் பாத்திரம் மிக மிக முக்கியமானதுமாகும். சோவியத் புரட்சிக்கு முன்னதாகவே 35 மொழிகளில் 544 பதிப்புகளைக் கண்ட கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம், இன்று வரை யிலும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டும், கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு கொண்டும் இருக்கும் மிக முக்கியமானதொரு கருத்துப் பேழையாக இருக்கிறது. ஆயிரக்க ணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வெளி யிடப்பட்டு மறுமையில் சொர்க்கத்தை அடை வதற்கான மார்க்கங்களை சுட்டிக்காட்டும் மறைநூல்களுக்கு மாற்றாக, இப்பூவுலகிலேயே சொர்க்கத்தை உருவாக்க முடியும் எனும் அறிவியல் கண்ணோட்டத்தை விதைக்கும் மானுட நூலாக விளங்குகிறது.
பகுத்தறிவை அழித்தொழித்தல் எனும் நூலில் ‘ஏகாதிபத்திய உலகில் மூடக்கருத்தி யலை பரப்புதல் ஒரு சர்வதேச இயல் நிகழ்வா கும்’ என ஜார்ஜ் லூகாக்ஸ் விடுக்கும் எச்சரிக்கை யும், வலதுசாரி அரசியல் என்பது உலகம் முழு வதும் வலுப்பெற்று வருகிறது என்ற நிகழ்கால செய்திகளும் நமக்கு ஒரு அம்சத்தை சுட்டிக் காட்டுகிறது; அறிவியல் கண்ணோட்டங்களை சமூகத்தில் வலுப்பெற செய்வதன் மூலம் இவற்றை வெல்ல முடியும் என்பதே அது! கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கங்கள் அதற்கு உதவிடும். அந்த அறிக்கையை படிப்ப தால் மட்டுமே உலகை மாற்றி விட முடியாது; ஆனால், இதைப் போன்ற புத்தகங்களை வாசிப்ப தன் மூலம் உலகத்தை மாற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை சமூகத்தில் விதைக்க முடியும். பிப்ரவரி 21 ல் இத்தகைய வாசிப்பு இயக்கத்தை பரவலாக முன்னெடுப்போம்!
கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்