tamilnadu

img

கரும்பை பாழ்படுத்தும் பன்றிகள்: நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவள்ளூர், மே 4- திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு  பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக திருத்தணி, ஆர்.கே. பேட்டை,  பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களில் கூடு தலாக கரும்பு சாகுபடி நடைபெறுகிறது. பொதுவாக அக்டோபரில் நடவு செய்து  அடுத்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் அறுவடை செய்கின்றனர்.  கடந்த ஆண்டு  கடும் வறட்சி காரணமாக கரும்பு விவசாயம்   முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற் பட்டுள்ளது.

கரும்பு அறுவடைக்கு இன்னும் 5 மாதங்கள் இறந்த நிலையில், நிலையில் நூற்றுக்கணக்கான பன்றிகள் விளை நிலங்களில் இறங்கி கரும்பை அழித்து வரு கிறது. இதனால் ஏக்கர் ஒன்றிற்கு சுமார்  50 டன் வரை  கரும்பை வெட்டி எடுக்கப்  பட்டு வந்த நிலையில் இப்போது பன்றிகள்  தோட்டத்தின்  உள்ளே  புகுந்து 10 டன் அள விற்கு பாழ்படுத்துவதா கவும், இதனால் ஏக்கருக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலை வர் பி.பாபு என்பவர் திருத்தணி அருகில் உள்ள கொல்லக் குப்பத்தில் 13 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள் ளார். நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதை கண்டு மகிழ்ச்சியடையும் நேரத்தில், 8 ஏக்கர் நிலத்தில் பன்றிகள் உள்ளே புகுந்து கரும்புகளை பாழ்படுதியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று  காரணமாக ஆள் நடமாட்டம் குறைந்த தால் பன்றிகள் கரும்பு தோட்டத்திலேயே குடியேறி தோட்டத்தை அழித்து வருகி றது. இதனால் பல லட்சக்கணக்கான ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொன் பாடி, வெங்கட்டாபுரம், மோட்டூர் உள்ளிட்ட  ஏராளமான கரும்பு விவசாயிகள் பாதித்  துள்ளனர் என வேதனயுடன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பன்றிகளால் கருமபு விவசாயம் முற்றிலும் பாதிக்கிறது என்று  சொல்லி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்க வேண்டும். அத்திமாஞ்சேரி கோட்டம் புன்னியம் கிராமம், திருவா லங்காடு ஒன்றியத் தில் 10 கிராமங்க ளுக்கு மேல் பன்றியால் கரும்பு விவசாயம் பாதிக்கிறது என்று திருத்தணி சரக  வன  அலுவலரடம் மனுக்கள் அளித்தும் நட வடிக்கையில்லை என்று தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சி.பெருமாள், மாநில குழு உறுப்பி னர் எஸ். ஜெயச்சந்திரன் ஆகியோர் குற்றம்  சாட்டுகின்றனர். ஊரடங்கு காலம் என்பதால் ஆட்கள்  நடமாட்டம் இல்லாத நிலையுள்ளது. வனத்  துறையினர் தான் கரும்பு விளைச்சலை  பன்றிகளின்  அழிப்பதிலிருந்து பாதுகாக்க  வேண்டும். தோட்டத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்ட அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும், பன்றிக ளால் ஏற்பட்டுள்ள இழப்பை அதிகாரிகள் நேரடியாக சென்று கணக்கு எடுத்து உரிய நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

-பெ.ரூபன்