tamilnadu

img

இஎஸ்ஐ திட்டத்தில் முதலாளிகள் பங்குத் தொகை குறைப்பு

நாமக்கல், ஜூன் 17- தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத் திற்கு(இஎஸ்ஐ) முதலாளிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை குறைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு பஞ்சாலை சம்மேளனம்(சிஐடியு) கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம்,  வெப்படையில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.  இதில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தில் (இஎஸ்ஐ) முதலாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையை மத்திய அரசு குறைப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மருத்துவ வசதி திட்டத்தில் தொழிலாளர்கள் பயன்பெற உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும். 1995 பிஎஃப்  பென்ஷன்தாரர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷனாக மத்திய அரசு ரூ.6500ஐ அறிவித்து அமலாக்க  வேண்டும்.  பென்ச னில்  கம்யூட்டேசன் பெற்றவர்களுக்கு உரிய காலத்திற்கு மேல்  பிடிக்கப்பட்ட  தொகை  திரும்ப கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்ச  கூலி ரூ. 439 என்பதை ஏப்ரல் 2019 முதல் அமலாக்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நாளொ ன்றுக்கு ரூ.600 குறைந்தபட்ச கூலியாக வழங்க வேண்டும். கூட்டுறவு நூற்பாலை களில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தினக் கூலி தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 439 அமலாக்க உத்தரவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதேபோல், சிஐடியு மாநில மாநாடு மற்றும் சென்னையில் நடைபெறும் அகில இந்திய மாநாடுகளை வெற்றிகரமாக்கும் வகையில், அம்மாநாடு களின் நோக்கங்கள் மற்றும் கோரிக்கை களை தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன், மாநில பொருளாளர் எஸ். சக்திவேல் மாநிலக்குழு உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.