நிலக்கோட்டையில் சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மக்கள் சந்திப்பு நடைபயணத்தை மாநிலக் குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் துவக்கிவைத்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.அஜாய் கோஷ் நிறைவு செய்து பேசினார். ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.