உயிர்காக்கும் பணியில் செங்கொடி இயக்கம்
கொரோனா நோய் இந்தியா வில் 2020ஜனவரியில் பாதிப்பு தெரிந்தது, படிப்படியாக இதன் தாக்கம் அதிகரித்து இன்று சுமார் 6 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. நோய் தாக்கத்திலிருந்து குணமடைந் தோர் சுமார் 3.5லட்சம் பேர் என்பது சிறிது ஆறுதல்.
தமிழகத்தில் சென்னை, அதையொட்டி யுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடி யாக மதுரை மாவட்டத்தில், குறிப்பாக மதுரை நகரில் அதிகமாக பாதிப்பு உள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள மதுரை நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். நோயின் தாக்கம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 500ஐ கடந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் அரசும், மாவட்ட நிர்வாக மும் சுகாதாரத்துறையும் சில நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. இத்தகைய நட வடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி மதுரை மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குறிப்பாக மதுரையில் கொரோனாவிற்கான சோதனையை அதிகப் படுத்த வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதில் அரசின் தலையீடு போதுமானதாக இல்லாத நிலையில் மதுரை எம்.பி. மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த 10 தினங்களாக சோதனை செய்வது அதிகரித்துள்ளது.
இது, ஹாட்ஸ்பாட் என்று சொல்லக்கூடிய மதுரை வடக்குப்பகுதி உள்பட மதுரை நகர் முழுவதும் மக்களிடம் சிறிது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மதுரை நகரில் உள்ள 31 ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமும், தன்னார் வலர்கள் மூலமும் வீடு வீடாக சென்று நோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவது சற்று ஆறுதலாக உள்ளது. இது கடைக் கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர் கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விருப்ப மாக உள்ளது.
அனைத்து மக்களும் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, இந்நோயிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்கு அரசு எடுக்கும் முயற்சியே பிரதானம். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், மக்களவை உறுப்பினரும் மதுரை மக்க ளின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கையை யும், மருத்துவரீதியான தேவைகளையும் அர சின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் அதே வேளையில் மக்களுக்கான தேவைகளை கண்டறிந்து களப்பணியாற்றி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதற்கும், நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வும் உழைப்பாளி மக்கள் அதிகமுள்ள மதுரை நகரின் வடக்கு பகுதியான செல்லூர் மீனாம் பாள்புரம், புதூர் அண்ணாநகர் உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும், குலமங்கலம், டி.கல்லுப் பட்டி, பேரையூர் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், ஹோமியோ மருத்துவ முகாம்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் நடத்தியுள்ளன. இந்த முகாம்கள் மூலமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு (ஆர்சனிகம் ஆல்பம் 30) கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை செல்லூர் பகுதியில் 5 இடங்களிலும், புதூர், மீனாம் பாள்புரம் பகுதியில் தலா - 1 இடத்திலும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் முகாம்கள் நடைபெற்றன.
பாக்கியநாதபுரம் அசோக்நகர் பகுதியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற 58 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, மருத்துவரிடம் தனக்கான மருந்தை பெற்றுக்கொண்டு தனது மகளுக்கு ஒன்று, தனது பேத்திக்கு ஒன்று என கேட்டு வாங்கி சென்றது போன்ற பல நிகழ்வுகள், இந்நோயின் தாக்கத்தையும், மக்களின் அச்ச உணர்வையும், குடும்பங்களுக்குள் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற உணர்வையும் உணர்த்தியது. மாதர் சங்கத்தின் சார்பில் மதுரை சிஏஎஸ் காலனி செங்கோல் நகர் பகுதியில் வீடு வீடாக ஹோமியோ மாத்திரைகளை வழங்கிய போது மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சென்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னல மற்ற தோழர்கள் கொரோனா நோய் தொற்றிலி ருந்து மக்களை பாதுகாப்பதில் சமூக கடமை யாற்றியுள்ளனர். மருத்துவ முகாம் மக்களி டம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதி லும், களத்தில் நின்று நம்பிக்கை ஏற்படுத்து வதிலும், இடையறாது செயல்பட்டு வரும் தோழர்களுக்கு, கொரோனா முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை களத்தில் தந்துள் ளது. இனிவரும் காலங்களில் ஆரோக்கிய மான வாழ்வு அவசியமானது என்பதை ஒவ் வொரு தனிமனிதனையும் உணரச் செய்துள் ளது. கொரோனாவிலிருந்து மக்களை தற் காத்துக் கொள்ள ஒரு சில மருத்துவ முகாம் கள் மட்டும் போதாது; கம்யூனிஸ்ட்டுகள், தன்னார்வலர்கள் முயற்சி மட்டுமே போதாது.
அரசும், மாவட்ட நிர்வாகமும் நோய் தொற்றை குறைப்பதற்கு அரசு மருத்துவ மனைகளிலும், இஎஸ்ஐ மருத்துவமனை களிலும் செயல்பட்டு வரும் சித்தா, ஹோமியோ உள்ளிட்ட மருத்துவத்தின் மூலமும், ஹோமியோ, சித்தா உள்ளிட்ட மருத்துவம் படித்த மருத்துவர்களை முழுமையாக களத்தில் இறக்குவதன் மூலமும் இதுபோன்ற பேரிடர் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களிடம் உள்ள அவநம்பிக்கையைப் போக்கி நம்பிக்கையை உருவாக்க நம்மோடு இணைந்து பணியாற்றி இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதற்கு உதவிய ப்ரீதா, மகாத்மா, சிவபாலன் காயத்ரி ஹோமியோ மருத்துவமனைகளின் மருத்துவர்கள் டி.செங்குட்டுவன், கே.தனபாலன், எஸ்.சிவக் குமார், எஸ்.சிவபாலன் மற்றும் மருத்துவர் எம்.செல்வமீனா, மதுரை புறநகர் பகுதியில் ஹோமியோ மருத்துவர் எஸ்.சரஸ்வதி உள்ளிட்ட மருத்துவர்களின் சேவை தொடர வேண்டும்.