tamilnadu

img

தடைக் கற்களை படிக் கற்களாக மாற்ற மகளிருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை, மார்ச் 7- மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படு வதை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் கிராமப்புர பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலை யில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டம், படித்த பெண்  களை ஊக்குவிக்க திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்  திட்டம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்க ளுக்கு எதிரான குற்றங்களை களைந்திட 13 அம்ச திட்டம்,  அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்க ளுக்கு ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் “அம்மா இருசக்கர வாகனத்  திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண்  குழந்தைகளுக்கு கற்பிப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதல்வர் கூறியுள்ளார்.