tamilnadu

img

சென்னை: 27 லட்சம் ரூபாய் பண மூட்டைகள் பறிமுதல்

சென்னை, டிச. 13- சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளா கத்தில் வைக்கப்பட்டிருந்த 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணக் கட்டுகள், சில்லரைகள் கொண்ட மூட்டைகளை காவல்  துறையினர் பறிமுதல் செய்தனர்.  சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளா கத்தில் மர்மமான முறையில் மூட்டைகள் வைக்கப்பட்டிருப்ப தாக கிடைத்த தகவலின்பேரில் கேகே நகர் காவல்துறையி னர் சம்பவ இடத்துக்கு வந்து கைப்பற்றி எடுத்துச் சென்ற னர். அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த  நிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், சென்னையில் வியாபாரிகளிடமிருந்து 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்று கேரளாவில் 10 ரூபாய் கட்டு களாக சில்லரையாக மாற்றி வரும் தொழிலை தாம் செய்து  வருவதாகவும், அதன்படி கேரளாவில் இருந்து தனியார் பேருந்து மூலம் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய்  கட்டுகள், சில்லறைகள் அடங்கிய மூட்டைகளுடன் வந்ததாக வும் குறிப்பிட்டார்.

கேகே நகர் உதயம் திரையரங்கம் அருகே வந்திறங்கிய தன்னை அழைத்துச் செல்ல வரவேண்டிய கார் வருவதற்கு தாமதமானதால் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மூட்டைகளை வைத்துவிட்டு காத்திருந்ததாகவும் ஐயப்பன் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினரும் மூட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது 20 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய்  நோட்டுகளும், 7 லட்சம் ரூபாய்க்கு சில்லறைகளும் இருந்ததை  காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இருப்பினும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் பறி முதல் செய்யப்பட்ட பணத்தை கேகே நகர் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் உரிய ஆவணத்தை அளித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் ஐயப்பனிடம் கே.கே. நகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மூட்டைகளில் இருந்த பணம், கணக்கில் வராத பணமா என்பது குறித்து வருமான வரித்துறை  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.