சென்னை, மார்ச் 11- ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து என்பிஆர் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், என்ஆர்சிக்கு வழிஅமைக்ககூடிய என்ஆர்பி-ஐ தமிழ்நட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் உதயகுமார், “தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேல் வசிக்கும் அனைத்து நபர்களின் விவ ரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் அனைத்து மதத்த வரும் பதிவு செய்யப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பதிவு செய்யவில்லை” என்றார்.
2010 ஆம் ஆண்டின் படிவத்தில் உள்ளதைக் காட்டிலும் 2020 ஆம் ஆண்டின் படிவத்தில் கூடுதலாக மூன்று கேள்விகள் இருக்கிறது. இதுதான் இப்போதைக்கு எழுப்படும் அச்சமா கும். அதுகுறித்து மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம். இன்னமும் பதில் வரவில்லை என்றும் அமைச்சர் கூறினார். என்பிஆர் கணக்கெடுப்பு பணி எப்போதும் துவங்கப்படும் என்று இதுவரைக்கும் அறிவிக்கப்படவில்லை. முதல் கட்ட மாக மக்கள் தொகை கணக்கெடுப்புதான் எடுக்க உள்ளோம். இந்த பணி தமிழ்நாட்டில் வரும் ஜூன் மாதம் 16 முதல் ஜூலை 30 வரை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.