முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை,ஆக.28- அரசு போக்குவரத்துக்கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க வழிவகுக்கும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 288 ஏ-வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலம் முழுவதும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.அரசு பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
கீழ்க்கண்ட இரண்டு முக்கிய பிரச்சனை களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வரு கிறேன். இதன் மீது தாங்கள் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு போக்குவரத்துக் கழகங்கள் உரு வாக்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 48 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் (மலை கிராமங்கள் உள்பட) இணைக்கச் செய்யும் வகை யிலும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் சென்று வருகின்றன. மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு இலவச போக்குவரத்து சேவையை அரசு போக்கு வரத்துக் கழகங்கள் தொடர்ந்து வழங்கி வருவது மட்டுமல்லாமல் சிறப்பான முறையில் தமிழக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன.
அரசு பேருந்துகளை முழுமையாக இயக்குக!
இந்நிலையில் தமிழக அரசு, மோட்டார் வாகனச் சட்ட விதிகள் 288 ஏ - என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், அரசு போக்குவரத்தின் ஒரு பகுதி வழித் தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது. மின்சார பேருந்துகளுக்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்று கூறப்பட்டாலும் கூட இது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். அரசுப்போக்குவரத்து கழகங்களின் வழித்தடங்களில் தனியார் வாக னங்களை அனுமதித்தால் அரசு போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். பொதுப் போக்குவரத்தையே பெரிதும் நம்பி யிருக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். எனவே, மோட்டார் வாகன சட்டம் 1988ல் செய்துள்ள விதித் திருத்தத்தை ரத்து செய்து, அரசு பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்குவதற்கு சாலை வரியை செலுத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்படி ஒரு வாகனம் 10 நாட்களுக்கு மேல் இயங்க முடி யாத நிலை ஏற்பட்டால் வாகனம் இயங்காத காலத்திற்கு சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 18 முடிய வாகனங்களை முற்றிலும் இயக்கக் கூடாது என அரசே தடை விதித்திருந்த நிலை யில், அந்த காலகட்டத்திற்கு வசூலிக்கப்பட்ட சாலை வரியை திரும்ப வழங்கிட வேண்டும். சாலை வரியை திரும்ப வழங்குவதற்கு பதி லாக, அடுத்து செலுத்தவேண்டிய தவணைக் கான சாலை வரியை செலுத்த வேண்டுமென நிர்ப்பந்தம் செய்வதாக வாகன உரிமை யாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். எனவே, வாகனங்கள் இயல்பாக ஓடும் நிலை வரும் வரை வாகன வரியை ரத்து செய்ய வேண்டும்.
புதுப்பித்தல்-பதிவுகளுக்கு விதிவிலக்கு அளித்திடுக!
அதைப்போன்று, 90 சதவீதத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அரசு மற்றும் தனியார் நிதி நிறு வனங்களிடம் கடன் பெற்றுத்தான் இயங்கி வரு கின்றன. செப்டம்பர் மாதம் வரை தவணைத் தொகை செலுத்துவதை மத்திய ரிசர்வ் வங்கியே தள்ளி வைத்துள்ளது. அதையும் மீறி சில நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை செலுத்த நிர்ப்பந்தித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. மேலும், தவணை செலுத்தாத மாதங்களுக்கு வட்டி, அபராத வட்டி கணக்கிட்டு அசல் தொகையில் சேர்க்கும் நிலைகூட ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, வாகனங்கள் ஓடாத மாதங் களுக்கு உரிய வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இயல்பு நிலை திரும்புகிற வரை தவணை வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும். டிசம்பர் வரை அனைத்து வகை யான புதுப்பித்தல் மற்றும் பதிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.