சென்னை, டிச. 19- தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான இடஒதுக்கீட்டை தமி ழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் நகராட்சிப் பகுதிகளிலும் தேர்தல்களை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தமுள்ள 15 மாநக ராட்சிகளில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து சமீபத்தில் அறிவிக்கப் பட்டு இருந்தது. தற்போது மொத்தமுள்ள 121 நகராட்சிகளில், நகராட்சி தலைவர் பத விக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலை மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப் பட்டிருப்பதாவது:-
நகராட்சி தலைவர் பதவியில் தாழ்த்தப் பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அறி விக்கப்படுகிறது. அதன்படி, கூடலூர் நகராட்சி (நீலகிரி மாவட்டம்) தலைவர் பதவி, பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதக மண்டலம், குன்னூர், சங்கரன்கோவில், பேர ணாம்பேட், பெரம்பலூர் ஆகிய 9 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லி யாழம் (நீலகிரி மாவட்டம்), ஆத்தூர் (சேலம் மாவட்டம்), நரசிங்கபுரம், திருவேற்காடு (திருவள்ளூர்), கூத்தாநல்லூர் (திருவாரூர் மாவட்டம்), மறைமலை நகர் ஆகிய 8 நக ராட்சி தலைவர் பதவிகள், தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருவத்திபுரம் (திருவண்ணாமலை மாவட் டம்), வந்தவாசி, கும்பகோணம், மயிலாடு துறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவ கோட்டை, காரைக்குடி, கீழக்கரை.
தாராபுரம், உடுமலைப்பேட்டை, கடைய நல்லூர், தென்காசி, செங்கோட்டை, அம்பா சமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில் பட்டி, காயல்பட்டினம், குளித்துறை, பத்ம நாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங் கல், ராஜபாளையம், ராசிபுரம். திருவாரூர், துறையூர், வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, மேட்டுப்பாளையம், பொள் ளாச்சி, மதுராந்தகம், செங்கல்பட்டு, போடி நாயக்கனூர், பெரியகுளம், கம்பம், குளித் தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தர்ம புரி, விழுப்புரம், திருமங்கலம் ஆகிய 51 நக ராட்சி தலைவர் பதவி இடங்கள் பெண்க ளுக்கு (பொதுப்பிரிவு) ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 121 நகராட்சிகளில் 61 நக ராட்சி தலைவர் பதவி இடங்கள், அதாவது 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.