tamilnadu

img

அரசுப் பேருந்து கண்ணாடிகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்குத் தடை

சென்னை, ஆக.13 - தமிழகத்தில் அரசுப் பேருந்து கண்ணாடி களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் கீழ் சுமார் 19,489 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்பம், அலுவலகப் பணியாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் 1 லட்சத்து 31 ஆயிரத்து 298 பேர் பணியாற்றி வருகின்றனர்.  இந்தப் பேருந்துகள் போதிய பராமரிப்பி ன்றி இயக்கப்படுவதால், அதிகளவு  விபத்துகள் ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சரி செய்யும் வகையில் அரசு பேருந்து களைப் புதுப்பிக்கும் நடவடிக்கையைத் தீவிரப் படுத்தி உள்ளது. அதேபோல, விபத்து ஏற்படுத்தும் காரணிகள் குறித்து ஆய்வு செய்த போது, ஓட்டுநர் கள் சாலையை கவனிக்க முடியாததற்கு கண்ணாடி களில் ஒட்டப்படும் தேவையற்ற ஸ்டிக்கர்களும் ஒரு தடையாக இருப்பது தெரியவந்தது.

அண்மையில் சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் போக்குவரத்துக் கழகங்க ளின் தொழில்நுட்ப மேலாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேருந்துகளின் முன், பின் கண்ணாடிகளில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பேருந்துக ளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நடவ டிக்கையின் ஒரு பகுதியாக ஓட்டுநர்களுக்கு இடையூறாக இருக்கும் தேவையற்ற ஸ்டிக்கர்க ளை ஒட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது ஒட்டப்பட்டு உள்ள ஸ்டிக்கர்களை அகற்றவும், அதேபோல் வருங்காலங்களில் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  மேலும் பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்யும்போது ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை என்பதை உறுதி செய்வதுடன், ஆய்வின் போது குறைகள் காணப்பட்டால் பேருந்து நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் கிளைகளின் தொழில் நுட்ப மேற்பார்வையாளர்களே அதற்கு பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.