tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் தாங்கல் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் ரசாயன உப்பளத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் போராட்டம் நட்திய தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும். சங்கத்தின் நிர்வாகி உமாநாத்தை விடுதலை செய்யக்கோரியும் சிஐடியு சார்பில் சூனாம்பேடு பேருந்து நிலையத்தில் புதனன்று (மார்ச் 11)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்கள்  க.பழனிச்சாமி, பகத்சிங்தாஸ், சிபிஎம் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, மதிமுக ஒன்றிய செயலாளர் சாஞ்சிசேகர் உள்ளிட்ட பலர்  பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ் பேசினார்.