tamilnadu

அரசுப் பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி: விஐடியில் பாராட்டு விழா

வேலூர், ஜூன் 13- வேலூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிக ளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.  தொடர்ந்து, நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு கேடயமும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. தவிர, ரூ.22 லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலி களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில், விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், விஐடி பேராசிரியர் சி.ஆர்.சுந்தர ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.