பாலியல் வன்முறைகளை கண்டித்தும், தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.குப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் பி சாந்தி, சுமதி மற்றும் சிஐடியு எம்பி.ராமச்சந்திரன், எஸ்.பரசுராமன், என்.காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.