tamilnadu

img

குடியாத்தம் தாலுக்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் தாலுக்கா இந்திரா நகர் பகுதியில் வழங்கிய வீட்டுமனைப் பட்டாவை அரசு பதிவேட்டில் பதிய வேண்டும், குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் சி.பூங்காவனம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பி்.காத்தவராயன், தாலுக்கா செயலாளர்கள் கே.சாமிநாதன், பி.குணசேகரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.