tamilnadu

img

அதிகரிக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: துரைமுருகன்

சென்னை, மார்ச் 17- கேள்வி நேரத்திற்குபின் பேசிய எதிர்க் கட்சித் துணைத் தலைவர்  துரைமுருகன், “ மதுரையில் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் வீரமணி ஆகியோர் வீட்டில் வெடி குண்டுகள் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதங்களை”  சுட்டிக்காட்டினார். ஒரே நாளில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களும் எவ்வளவு  அபாயகரமானது என்பதை இந்த அரசு உணரவேண்டும். இதை  சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நிலைமை படுமோச மாக இருக்கிறது. இந்த கலாச்சாரம் தொடரக்கூடாது. இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக்கூடாது. வெறுக்கத் தக்க இந்த சம்பவத்தை முளையிலேயே முதலமைச்சர் கிள்ளி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கும்பகோணத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த ஒரு கும்பல் அந்த வீட்டின் தம்பதிகளை இரும்பு கம்பியால் கொடூர மாக தாக்கி கொலை செய்த சம்பவத்தை முதலமைச்சர் கவனத்  துக்குக் கொண்டு வந்த துரைமுருகன்,  இந்த சம்பவங்கள் மீது அரசு  எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர்,“ திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சின்னகோவிலூர் தங்கவேல் பீடி  மண்டியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த மண்டியில்  அமைச்சர் வீரமணியின் சகோதரர்கள் அழகிரி, ராவணன் ஆகி யோர் பங்குதாரர்களாக உள்ளனர். இது ஒரு சாதாரண தீ விபத்து தான். ஆனால், ஊடகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தாக தவறான செய்தி வெளி வந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து இதுவரை காவல்நிலையத்தில் எந்த புகாரும் தரப்பட வில்லை. எனவே, யாரும் கைதுசெய்யப்படவில்லை.

இப்போதுதான் இந்த சம்பவம் நடப்பதாக ஒரு தோற்றத்தை  உருவாக்குகிறார். உங்கள் ஆட்சிக் காலத்திலும் சிவகங்கை யில் திமுக நகரமன்றத் தலைவர் காரில் சென்றபோது ரிமோட்  குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.  இதுபோன்ற சம்பவங்கள் சொந்த பிரச்சனைக்காக எல்லா ஆட்சியிலும் நடைபெறுகிறது. இருந்தாலும் குற்றங்களை குறைப்பதற்கும், இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவும் சிசிடிவி கேமரா  வைத்து கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து  வருகிறது” என்றார்.