tamilnadu

கடன் தொல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள வந்த குடும்பம்

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் பிச்சை (47). சோடாகம்பெனி நடத்தி வருகிறார்.  இவரது மனைவி பாக்கியலெட்சுமி (40), மகள் ஜெபா (17), மகன் ஆரோன் (14) ஆகியஇரு குழந்தைகள் உள்ளனர்.பிச்சை அதே பகுதியைச்சேர்ந்த ராமர் என்பரிடம் வட்டிக்கு  ரூ.20 ஆயிரம்   பெற்றுள்ளார். அத்தொகையை வட்டியுடன்  திரும்ப பிச்சை கொடுத்து விட்டாராம்.ஆனால் ராமர், மீண்டும் ஒரு லட்சம் பணம் கேட்டுபிச்சையை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து எம். ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் பிச்சை புகார் செய்தும் உரிய நடவடிக்கை  எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த பிச்சை தனது குடும்பத்தினருடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்ததிற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவரது கைப்பையை சோதனையிட்டனர். அப் போது மண்ணெண்ணெய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கேனை பறிமுதல் செய்த காவலர்கள், பிச்சை மற்றும் அவரது குடும்பத்தினரை  சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.