tamilnadu

img

சேறும் சகதியுமான மார்க்கெட் சாலை

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த சில  நாட்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தொடர் மழையால் திண்டிவனம் நேரு வீதியில் காய்கறி மார்க்கெட், வங்கிகள், தாலுகா அலுவலகம், வணிக வளாக நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அதனால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்லுகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்  மழை பெய்தது. இதனால், நேருவீதி? சேறும் சகதியுமாக மாறிவாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது. காய்கறி மார்க்கெட் பகுதி, சாலை இருந்த தற்கான அடையாளம் தெரியாத வகையில் சேறும்  சகதியுமாக இருப்பதால், பைக்கில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழுகின்றனர்.சாலை மோசமாக இருப்பதால் காய்கறி வாங்க பொதுமக்கள் வராத தால் வியாபாரிகள் விற்பனையின்றி தவித்து வரு கின்றனர். மார்க்கெட் பகுதியில் புதிய தார்ச் சாலை  போட வேண்டும் என காய்கறி வியாபாரிகள் சங்கம்  சார்பில், நகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு  கொடுத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக சாலையை சரிசெய்ய வேண்  டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.