உளுந்தூர்பேட்டை, அக். 12- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருநாவலூர் மேற்கு ஒன்றியக்குழு மற்றும் விடிவெள்ளி காவல் பயிற்சி நிலையம் இணைந்து களமருதூர் அரசு மேல்நிலை ப்பள்ளியில் சனிக்கிழமை யன்று (அக்.12) ரத்ததான முகாம் நடத்தியது. இந்த முகாமிற்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் பி.பத்மநாபன் தலைமை தாங்கினார். ஒன்றி யச் செயலாளர் ஏ.தங்கமணி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை முகாமை துவக்கிவை த்தார். விடிவெள்ளி காவல் பயிற்சி நிலையத்தின் நிறுவ னர் ஆர்.ரமேஷ், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்து வர்கள் பிரதீபா, பிரிய தர்ஷினி, சுகாதார மேற்பார்வையாளர் பெரு மாள், ஆய்வாளர்கள் பி.குமாரசாமி, பி.பாலாஜி, லயன்ஸ் கிளப் சார்பில் ஜி.முத்தையா, ஜி.ரங்க நாதன், எம்.அக்பர்அலி, ஆசிரியர்கள் எஸ்.திரிசங்கு, கே.குமரன், வாலிபர் சங்க இரத்ததான கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் வி.மார்த்தாண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.