tamilnadu

img

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு

டிச.17-ல் தமிழகம் முழுவதும் போராட்டம் - விக்கிரமராஜா பேட்டி

தருமபுரி, நவ.27- சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிச.17-ல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வணிகர் சங்கத்தின் மாநில தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித் துள்ளார். தருமபுரி மாவட்ட அனைத்து  வணிகர் சங்கத்தின் பொதுக்குழு  கூட்டம் தருமபுரி ரோட்டரி ஹாலில்  மாவட்டத் தலைவர் எஸ்.வைத்தி லிங்கம் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர்  மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் கூறு கையில், தமிழ்நாடு அனைத்து வணிகர் பேரமைப்பு சார்பாக சில்லறை வணிகத்தில் அந்நிய முத லீட்டை தொடர்ந்து எதிர்த்து வரு கிறோம். மத்திய பாஜக அரசும்,   மாநில அதிமுக அரசும் தேர்தலின் போது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க  மாட்டோம் என வாக்குறுதியளித் தார்கள். ஆனால் அந்நிய சக்திகள் சில்லறை வணிகத்தில் நுழைந்து சூறையாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அமேசான், பிலிப்காட் போன்ற நிறுவனங்கள் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. மருந்து, பழங்கள், காய்கறி, மளிகை  பொருட்கள், ஜவுளி ஆகிய அனைத் தையும் ஆக்கிரமித்துக் கொண்டி ருக்கிறார்கள்.  எனவே தான் ஆன்லைன் வர்த்த கத்தை தடைசெய்ய வேண்டும் என நாடுதழுவிய அளவில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இதன் ஒருபகுதியாக,  ஆன்லைன் வர்த்த கத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிசம்பர் 17ஆம்  தேதியன்று  மாவட்ட தலைநகரங் களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. மேலும், மத்திய அரசு வெளி நாட்டு நிறுவனங்களை கொண்டு  தொழில் தொடங்க வலியுறுத்து கிறது. இதனால் உள்நாட்டு வணிகம் பாதிக்கப்படுகிறது. குறிப் பாக ஈரோட்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஜவுளி வியாபாரம் நடை பெற்றது. ஆனால் இன்றைய நிலை யில் ரூ 5 ஆயிரம் கோடிக்கு தான் வணிகம் நடக்கிறது. ரூ 15 ஆயிரம் கோடி காணாமல் போய்விட்டது. எனவே மத்திய அரசு உள்நாட்டு வணிகர்களை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.