விருதுநகர், ஜூன் 8- விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளை யம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியா பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 184 ஊராட்சி களில் ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோருக்கான தொழில் கடன், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்களை மேம் படுத்தல், புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க என மொத்தம் 6131 பய னாளிகள் பயன்பெறம் வகையில் ரூ.12.86 கோடி கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது.
இதற்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறிய தாவது: கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப் பின் மூலம் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வீதம், 1,472 நபர்களுக்கு நீண்டகால தனி நபர் தொழில் கடன் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். 74 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 1 லட் சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.1.11 கோடி ரூபாய் வழங்கப்படும். குழு ஒன்றுக்கு ஐந்து பயனாளிகள் அடங்கிய எட்டு தொழில் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மூலதன மானி யமாக வழங்கப்படும். புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த வேலையில்லாத 167 இளை ஞர்களுக்கு தொழில் துவங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 1.67 கோடி ரூபாய் நீண்ட காலக் கடனாக வழங்கப்படும். மூன்று உற்பத்தியாளர் கூட்டமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் ரூ.30 லட்சம் மூலதன மானியம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கை கள் மற்றும் ஆதரவற்றோர் தொழில் மேம் பாட்டிற்காக வறுமை பஒழிப்பு சங்கங்கள் மூலம் 1,472 உறுப்பினர்களுக்கு மொத்தம் 2.30 கோடி ரூபாய் நீண்ட காலப் கடனாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியன், திட்ட இயக்குநர்கள் சுரேஷ், ஆர்.தெய்வேந்திரன், புத்தாக்கத் திட்ட செயல் அலுவலர் பிரேம்குமார், நேர் முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.