tamilnadu

img

குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி பெண்களுக்கு கோலப்போட்டி

சென்னை, ஏப்.28- கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கியிருக் கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்கப்படுத் தும் வகையிலும் பயனுள்ள வகையில் அவர்கள் பொழுதை கழிக்கவும், தமி ழக காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக பெண்  கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி  ஒரு வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார் அதில் கூறியி ருப்பதாவது:-

இந்த ஊரடங்கு சம யத்தில் தமிழக காவல் துறை யினர் மேற்கொண்டு வரும் பணியை பொதுமக்களும் மதித்து நடந்து வருகிறார்  கள். வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு காவல் துறை சார்பில் ஓவி யப் போட்டியும், ரங்கோலி (கோலப்) போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 4  முதல் 10 வயதிற்கு உட்பட்ட  குழந்தைகள் என் குடும்ப மும், 11 முதல் 16 வயதிலான குழந்தைகள் எங்களின் அன்றாட ஹீரோக்கள் என்ற தலைப்பிலும் ஓவியங்களை அனுப்ப வேண்டும். பெண் கள் போ கொரோனா போ என்ற தலைப்பில் கோலம் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்காக வெளியில் வரக்கூடாது வீட்டுக்குள் ளேயே கோலம் வரைய வேண்டும். குழந்தைகள் வரையும் ஓவியங்களை tnpolic.artcontest@gmail.com என்ற முகவ ரிக்கும் தங்கள் கோலங்  களை tnpolic.rangolico ntest@gmail.com என்ற முகவரிக்கும் மே 3 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 பேர் தேர்வு  செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.