tamilnadu

img

முதலாளிகளுக்குச் சலுகை? ஊழியர்கள் தலையில் கை

சென்னை, மே 3- தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் விடுத்துள்ள அறிக்கை  தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரண மாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்க ளுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகிய வற்றை தமிழக அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்கப்பட்டதை தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது.

 மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இச் செயலானது அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 18 மாதங்களில் விலைவாசி புள்ளியை 01/07 2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.  கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க ப்பட்டு  ஒரு மாத காலத்தில் மத்திய மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு,  தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக் கூடிய அளவிற்கு நிலைமை உருவாகி உள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சித்  தன்மை யின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்து வதாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடி க்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக களத்தில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை, உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வை ஈட்டிய விடுப்பு ஒப்படை ப்பு  என்பது   மிகப் பெரிய கொடுமையாகும். நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நாட்டின் பெரும் முதலாளிகளுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வரிச்சலுகை, பல லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி பல லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதை போல தனது ஊழியர்கள் தலையில் கை வைப்ப து வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.