மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.13- சென்னை சூலை அரு கிலுள்ள கே.பி. பூங்காவில் கட்டிமுடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளை உரிய பயனாளிகளிடம் உட னடியாக ஒப்படைக்க வேண்டுமென்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
கொரோனா தொற்று தனி மைப்படுத்தும் மையத்திற் காக குடிசை மாற்று வாரி யத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களை பயன்படுத்தப்போவ தாக தமிழக அரசு முடி வெடுத்துள்ளது. எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கேபி பார்க் பகுதியிலுள்ள 864 குடியிருப்புகளையும் அத்திட்டத்தின் கீழ் அறி வித்துள்ளனர்.
கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் ஏற்கனவே அங்கு வசித்த மக்களுக்காக கட்டப்பட்டதாகும். கட்டு மானப் பணிகள் முடிந்து விட்டபோதும் சம்மந்தப்பட்ட மக்களுக்கு ஒப்படைக்கப்பட வில்லை. அப்புதிய குடி யிருப்பில் குடியேற வேண் டிய மக்களோ எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி கடந்த இரண்டு ஆண்டுக ளாக குடிசை மாற்று வாரி யத்தால் தகரக் கொட்டகை அறைகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும் பல் வேறு காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து வந்தனர்.
கொரோனா தொற்று பரவும் அபாயமுள்ள இச்சூழலில் எவ்வித சுகாதார வசதியுமின்றி கேபி பார்க் மக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக அப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஏற்க னவே அறிவித்தபடி அந்தந்த பயனாளிகளுக்கு கொடுப் பதே அரசின் முதற்பணியாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து கொரோனா தொற்று தடுக்கும் மையத்தை கேபி பார்க் குடியிருப்பில் மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உரு வாக்குவது நோய்தொற்றை அதிகப்படுத்தவே வழி வகுக்கும்.
எனவே, தமிழக அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் கே.பி.பார்க்கில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை அடிப்படைவசதிகளும் சுகாதார வசதிகளுமின்றி தவித்துக்கொண்டிருக்கும் உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்க நடவ டிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.