tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் பொதுக்கூட்டம்

நாட்டு மக்களை பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் இந்திய தேசத்தை பாதுகாத்து மக்கள் ஒற்றுமையை வளர்த்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமையன்று(பிப்.15) ஓசூர் காமராஜர் காலனியில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.