சென்னை,டிச.19- விதிமுறைகளுக்கு புறம்பாக, சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை கண்காணிக்க, சிறிய ரக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் சட்டத்துறை அமைச் சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்காக அண்ணா பல் கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.