லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின்யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். இந்த மாநிலத்தில் இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. இதில் ஹத்ராஸ் மாவட்ட தலித் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். காவல்துறையினரால் இரவோடு இரவாகஅவரது உடல் எரியூட்டப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலித் இளம்பெண் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மற்றொரு கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை ஒட்டிய புறநகர் பகுதியில் உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடலைகைப்பற்றிய காவல்துறையினர், தீவிரவிசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை பேறு கிடைப்பதற்காக சிறுமியை கொன்று நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை நரபலி கொடுத்த அங்குல், பீரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து கான்பூர் எஸ்.பி. பிரிஜேஷ் குமார் கூறுகையில், பரசுராம் என்பவர் தான் அங்குல், பீரன் ஆகியோருக்கு பணம்கொடுத்திருக்கிறார். இருவரும் மது அருந்திவிட்டு சிறுமியை கடத்தியிருக்கின்றனர். முதலில் சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். பிறகு சிறுமியை கொடூரமாக கொன்றுவிட்டு, அவரது நுரையீரலை துண்டித்து எடுத்து சென்று குழந்தை இல்லாத பரசுராம் தம்பதியிடம் கொடுத்துள்ளனர். கொலைக்கு காரணமான நான்குபேரையும் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தார். சிறுமியின் நரபலிக்கு காரணமான பரசுராம் தம்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.