tamilnadu

img

ராஜஸ்தான் நிலைமை ஆறுதல் அளிப்பதாக இல்லை

ரோனா உயிரிழப்புகளின் எண்ணி க்கை ராஜஸ்தானில் குறைவாக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து விடாத படி சமாளித்துக் கொண்டு இருக்கிறது மாநில அரசு. ஆனால், மாநிலந் திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் ஏதாவது வேலை, வரு மானம், வாழ்வாதாரத்தை தேடி அலைவதால் கிராமப்புறங்களில் தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் ஆறாவது இடத்தில்  உள்ளது. ஆனால், கோவிட்19 க்கு பலியா னோர் எண்ணிக்கை 500 க்கும் குறைவாகவே உள்ளது. மற்ற வட இந்திய- வடகிழக்கு மாநி லங்களுடன் ஒப்பிடும்போது ராஜஸ்தானில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

பக்கத்து மாநிலங்களை விட பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை யில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், பரத்பூர், பாலி மற்றும் உதயப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் மட்டுமே 60சதவீதம் பங்கு  வகிக்கின்றன. நல்வாய்ப்பாக,தொழில் நகரான பில்வாராவில் மார்ச் தொடக்கத்தில் தொற்று பரவல் ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே தனிமைப்படுத்தல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற் கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட்டது. இந்த ஒரு மாவட்டத்தோடு அரசின் வெற்றிகரமான அனுபவம் நின்று போய்விட் டது. ஜெய்ப்பூரிலும், ஜோத்பூரிலும் தொற்றாளர் களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

எச்சரிக்கை உணர்வுடனான அணுகுமுறை
தினமும் பத்து லட்சம் பேருக்கு பத்தாயிரம் பேர் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன.  (குஜராத்-5006:ம.பி- 3830:உ.பி-2682). ஜுன் 26 வரை 379 பேர்உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் கோவிட் 19 மரண விகிதம் 2.33சதவீதம் எனக் குறைவாகவே உள்ளது. (குஜராத் 5.99%; ம.பி. 4.28%). எனினும், அசோக் கெலாட் அரசு எச்சரிக்கை யாக உள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்ச்சி களுக்கு அனுமதியில்லை.மற்ற மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்களை திறந்து வைக்க அனுமதித்து போல ராஜஸ்தான் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்க வில்லை. தொழில் நிறுவனங்கள், பொதுப்போக்கு வரத்து, பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் எவ்விதத் தளர்வுகளும் கிடையாது.கொள்ளைநோய் அவசரச் சட்டம், 2020 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ன்படி, முகக் கவசம்  அணியாமை, சமூக இடைவெளியைப் பின்பற்றா மை, பொது இடங்களில் எச்சில் துப்புதல்- மது பானங்கள் அருந்துதல் ஆகியவை சிறைத்தண்ட னை அளிக்கக்கூடிய குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

வலிமையான விழிப்புணர்வு பிரச்சாரம்
ஜுன் மாதம் முழுவதும் கொரோனா விழிப் புணர்வு பிரச்சாரம் 11500 கிராம ஊராட்சி களில் நடத்தப்பட்டது.இது போன்ற பிரச்சாரம் வைரஸ் தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே நடத்தி இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. சொந்த ஊர்களுக்கு  திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களால் தொற்றுப் பரவல் அதிகரிக்க கூடும் என்ற கவலை  உள்ளது. மிதமானது முதல் தீவிரமான காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு  மருத்துவமனைகளை அணுக வேண்டுமென்று அரசு கூறினாலும், மாநிலத்தில் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கூட அடிப்படை யான மருத்துவ வசதிகள் இல்லை.

வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய நாசமும், அரசின் பாராமுகமும்
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு  கொரோ னா காலத்தை மேலும் மோசமாக்கிவிட்டது. அகில இந்தியத் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சஞ்சய் மாதோ விவசாயிகளின் நிலை பற்றிக் கூறுகையில்,”வெட்டுக் கிளிகள் பேரழிவை ஏற்படுத்திவிட்டது. ராபி (அக்-மார்ச்), கரீப்(ஜீலை-அக்) பயிர்கள் நாச மாகிவிட்டன. விவசாயிகள் சொல்லொண்ணாத் துயரத்தில் உள்ளனர். ஆனால், மாநில அரசோ விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடு வதற்கான சர்வேயைக் கூட இன்னும் தொடங்க வில்லை.வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய நாசம் போக எஞ்சிய பயிர்களை அறுவடை செய்த விவ சாயிகள் அதை மோசமான விலைக்கு விற்க  வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

மின்கட்டண பில் ஆயிரக் கணக்கில் வந்துள் ளது. இந்த நிலையில் அவர்களால் எவ்வாறு மின்  கட்டணம் செலுத்த முடியும்? ஆறு மாதங்களுக்கு  விவசாய பயன்பாட்டுக்கான மற்றும் வீடுகளுக் கான மின் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். நாட்டிலேயே, ராஜஸ்தானில்தான் மிக  அதிகமாக 18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர் கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். அவர் களுக்கு உடனடியாக வேலை தேவை. பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் வழங்கப் படும் ரூ.6000ஐ 8ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குடும்பத்திற்கு  200 நாட்கள் வேலை வழங்கி, ஊதியம் ரூ.600 ஆக அதிகரிக்க வேண்டும்” என்கிறார்.

ஃப்ரண்ட்லைன் (ஜூலை 17,2020) இதழில் 
 டி.கே.ராஜலட்சுமி கட்டுரையிலிருந்து
தொகுப்பு : ம. கதிரேசன்