கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கால் மும்பை முழுவதும் முடக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது, மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் அதனை நடைமுறைப்படுத்தினார். பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், மும்பை பகுதியில் உள்ளூர் ரயில்களில் நாள் ஒன்றுக்கு 80 லட்சம் பணிகளை தோராயமாக பயணம் செய்து வந்த நிலையில் , அது முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ரயில்கள் குறைவான அளவில் இயக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில்வே போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள மில்லியன் கணக்கான பயணிகளை பாதித்துள்ளது.
ரயில் போக்குவரத்து மீண்டு வரும் நிலையில், இன்று வழங்கிய சேவைகளில் சில ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. டாடா பவரின் மின்சாரம் தடைபட்டுள்ளதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக மும்பை மின்சார மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனை காலை 11 மணியளவில் மின்சாரப் பழுது சரிசெய்யப்பட்டது.
மின்சாரம் தடை காரணமாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டும் என்றும், தண்டவாளங்களில் நடக்க வேண்டாம் என்றும் மின்சார பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மும்பையில், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இதில், சென்ட்ரல் லைன், வெஸ்டர்ன் லைன் மற்றும் ஹார்பர் லைன் ஆகிய மூன்றும் நகரத்தின் ஒட்டுமொத்த சேவையையும் வழங்கி வருகிறது.