மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை, தானே உள்psளிட்ட பல பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலபகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. குர்லா சியோன் தானே ஆகிய பகுதிகளுக்கு இடையேயும் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.