புதுக்கோட்டை, பிப்.1 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழக மாநில மாநாடு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதி களில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான வரவேற் புக் குழு அமைப்புக் கூட்டம் புதுக்கோட்டையில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாதீர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். வரவேற்புக் குழுத் தலைவராக பிரபல குழந்தை கள் நல மருத்துவர் எம்.ராமதாஸ், செயலாளராக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், பொருளாளராக காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகி எம்.ஏ.ரகுமான் உள்ளிட்ட 75 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.