பள்ளப்பட்டியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜுன் 29- பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்கா மேலதிக்கத்தை எதிர்த்தும், திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தில் கட்சி தலைவர்கள் மீது இந்து முன்னணி தாக்குதல் நடத்தியது, முருகன் மாநாடு என்ற பெயரில் மதக்கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவை கண்டித்தும், கரூர் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் யாசின் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், கரூர் மாவட்ட தலைவர் சதீஸ், கரூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் தயாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கரூர் மாவட்ட இணைச் செயலாளர் ரஞ்சிதா நன்றி கூறினார். ஒன்றியக் குழு உறுபினர்கள் நவீன், கௌதம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.