“சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கனாது. புற்று நோயை உருவாக்கும்” ஆனால் சிகரெட்டின் அடியில் உள்ள பில்டர் (வடிகட்டி சிகரெட் புகைப்பதை விடக் கொடியது என்ற தகவல் வெளியாகியுள்ளது. “ஒரு டீக்கடைக்கு வெளியே ஒருவர் ஒரு கையில் டீயையும், மற்றொரு கையில் சிகரெட் டையும் பிடித்தபடி இருக்கிறார். அவருடன் சிக ரெட் பிடிப்பவர்கள் பலர் உள்ளனர். அவர் களைச் சுற்றி தரையில் சிகரெட் துண்டுகள் கிடக் கின்றன. டீயை குடித்து முடித்த அந்த நபர் சிகரெட்டை தரையில் போட்டு அதை காலால் மிதித்து அணைத்துவிட்டு செல்கிறார். மனிதர் களுக்குத் தெரியாதது என்னவென்றால், பூமியில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான சிகரெட் துண்டுகள் புதைந்து கிடக்கின்றன. தொடர்ந்து புதைந்து வருகின்றன என்பது தான். “நான் சிகரெட்டை குடித்துவிட்டு அதை போடுவதற்கென்றே வெளியே ஒரு பெட்டி வைத்திருக்கிறேன், ஆனால் பலர் அவற்றைப் பயன்படுத்துவதில்லை,” என்கிறார்
அந்த கடை யின் உரிமையாளர் சந்திரசேகர். ஆனால் அப் படியொரு பெட்டியை எங்கும் காணமுடியாது. அந்த டீக்கடைக்கு வந்த வாடிக்கையாள ரான சஞ்சீவி குறுக்கிட்டு, “இந்த பட்ஸில் (வடி கட்டியில்) என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும் நான் நினைக்கவில்லை.” என்றார். உண்மையில், சிகரெட் துண்டுகள் சுற்றுச் சூழல் மாசுபாட்டில் முக்கியப் பங்களிப்பை செலுத்துகின்றன. அது பிளாஸ்டிக் வடிகட்டி களைக் கொண்டுள்ளது, சிகரெட்டின் அடியில் உள்ள பில்டர் (வடிகட்டி) ஒருபோதும் உடைந்து போகாது, அது மைக்ரோபிளாஸ்டிக் மாசு பாட்டின் முக்கியக் காரணமாக உள்ளது. புகையிலைப் பொருட்களின் கழிவுகளில் 7,000 நச்சு இரசாயனங்கள் உள்ளன. சிகரெட் துண்டுகளில் முக்கியமாக செல்லுலோஸ் அசிடேட், காகிதம் மற்றும் ரேயான் உள்ளது. இது நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகிறது. ஒரு சிகரெட் துண்டில் இருந்து வெளியேறும் இரசாயனம் 96 மணிநேரம் வெளிப்படும் 50 சதவீத உப்பு நீர் மற்றும் நன்னீரில் வாழும் மீன்களை அழிக்கக்கூடிய நச்சுகளை வெளியிடு கிறது என்கிறது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ட்ரூத் இனிஷியேட்டிவ் என்ற தன்னார்வ நிறுவனத்தின் அறிக்கை. சிகரெட் துண்டுகளால் ஏற்படும் மாசு பாட்டைக் கட்டுப்படுத்த அரசு அதிகமாக எதுவும் செய்யவில்லை. 2020 ஆம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (CPCB) சிகரெட் துண்டுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்கள் எதையும் செய்யவில்லை.
தகவல் தொழில்நுட்ப வல்லுநரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான நிரித் தத்தா, ஸ்டப்களால் (வடிகட்டிகளால்) ஏற்படும் மாசுபாடு பிரச்சனைக்கு மக்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய விழிப்புணர்வுப் பிரச் சாரத்தைத் தொடங்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு, தத்தா சிகரெட் துண்டுகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதி யாக பட்ரஷ் என்ற நிறுவனத்தை நிறுவினார். சிகரெட் துண்டுகள் கடல்களுக்கும், பூமிக் குள்ளும் நுழைகின்றன. இதுதான் நாம் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு, என்கி றார். “சிகரெட் துண்டு களின் நச்சுத்தன்மை யைப் மக்கள் பெரும் பாலும் அறிந்திருக்க வில்லை என்பதை நான் உணர்ந்தேன். பில்டர் பருத்தியால் ஆனது, மக்கும் தன்மை உடையதுஎன்று பலர் நினைக்கிறார்கள். அவை செல்லுலோஸ் அசிடேட்டால் ஆனது என்பது பலருக்கும் தெரியாது, இது மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
தத்தா இது குறித்த விழிப்புணர்வை கொல் கத்தாவில் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தியுள்ளார். இதற்கு நல்ல பலன் கிடைத் துள்ளது. தொடர்ந்து பெங்களூரு, புது தில்லி மற்றும் மும்பையில் பிரச்சாரம் செய்தார். பிரச் சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கவனக்குறைவாக சிதறிக்கிடந்த ஆயிரக்கணக் கான புகைத்தபின்பு விட்டுச் சென்ற சிகரெட் துண்டுகளை சேகரித்துள்ளார். சிகரெட் துண்டுகள் குறிப்பாக கார்ப்பரேட் அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு அதிகம் காணப்படுகின்றன என்கிறார் தத்தா. அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ள தத்தா ஒரு மில்லியன் துண்டுகளைச் சேகரித்து, தரவு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு செய்து ஒன்றிய-மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த ஒரு குறிப்பை அளிக்க உள்ளார்.
அதே நேரத்தில், புகையிலை கொள்முதல் செய்யும் கார்ப்பரேட்டுகள் சிகரெட்டுக்கு எதிரான இயக்கங்களை அவர்கள் விரும்ப வில்லை என்கிறார் தத்தா. சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் என்ன செய்கிறது, அவற்றை எவ்வாறு சேகரிக்கலாம். எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளியா ராமச்சந்தின் கூறுகையில், “தினமும் காலையில் தெருக்களில் சிகரெட் துண்டுகள் உள்ளிட்ட குப்பைகளை அப்புறப் படுத்தி குப்பைக்கிடங்கிற்கு கொண்டுபோய் எரித்துவிடுகிறோம் என்றார். ஆனால், பிரச்சனையின் வேர் அங்குதான் உள்ளது. மறுசுழற்சி செய்வதற்காக சிகரெட் துண்டு களை சேகரிக்கும் பூனாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான பட் பேலட்டின் நிறுவனர் நளினி மங்வானி, நகரின் பொது இடங்களில் சிகரெட் துண்டுகளை சேகரிக்க போர்ட்டபிள் ஆஷ்ட்ரேக்களை வைத்துள்ளார். அதே நேரத்தில் சிகரெட் துண்டுகளை மறு சுழற்சி செய்வது கடினம் என்கிறார். ஏனெனடிவ “அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவற்றை சில கரைப்பான்களுடன் சேர்த்து அப்புறப்படுத்துகிறோம் என்றார்.
நன்றி: தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: சௌமி