தஞ்சை பாரதி புத்தகாலயம் சார்பில் உலகப் புத்தக தின விழா
தஞ்சாவூர், ஏப்.21- தஞ்சாவூர் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் தஞ்சாவூர் இராணுவத்தினர் மாளிகையில் அமைந்துள்ள பாரதி புத்தகாலயத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலகப் புத்தகதின விழா, ஞாயிறு அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. சா. கோதண்டபாணி தலைமை வகித்தார். இரா. பன்னீர்செல்வம் வரவேற்றனர். தொடர்ந்து, தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச. முரசொலி சிறுப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மன்னை வாசிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ், “வாசிப்பு இயக்க அனுபவங்கள்” குறித்து சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் சே.செல்வராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ப.சத்தியநாதன், பெஃபி சார்பில் எஸ். புவனா, எல்ஐசி ஓய்வூதியர் சங்கம் சார்பில் இரா.புண்ணியமூர்த்தி, தமுஎகச சார்பில் இரா.விஜயகுமார், வீரா பதிப்பகம் சார்பில் ச.வீரமணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கு.சந்துரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். செ.கா. லெனின் நன்றி கூறினார். உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 20 முதல் மே 1 வரை புத்தகங்களுக்கு 20 % கழிவு அளிக்கப்படும் என பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.