tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா அரசு?

சென்னை, ஜூன் 12 - போராட்ட களத்திற்கே வந்து கொடுத்த வாக்குறுதிகளை, முதலமைச்சர் நிறைவேற்றாதது ஏன்? என்று   மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கேள்வி எழுப்பி யுள்ளார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 4ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூன் 11) நங்கநல்லூரில் நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பேரணி, பொதுக் கூட்டத்தில் பா.ஜான்சிராணி பேசியதன் சுருக்கம் வருமாறு: மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய பன்னோக்கு அடையாள அட்டை  வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.  8 ஆண்டுகளாகியும் அதை நிறைவேற்றா மல் உள்ளனர். தமிழக அரசின் சலுகைகள்  பெற மாற்றுத்திறனாளிகள் அலைகழிக் கப்படுகின்றனர். பகுதி வாரியாக முகாம் களை நடத்தி, அனைத்து ஆவணங்கள், சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, போராட்ட களத்திற்கே வந்து, ஆட்சி பொறுப் பேற்றதும் கோரிக்கைளை நிறைவேற்று வதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.  அண்மை யில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய சமூக நலத்துறை அமைச்ச ரும் உதவித்தொகைகளை உயர்த்தவதாக வாக்குறுதிகளை அளித்தார். இவற்றை எதையுமே அரசு நிறைவேற்றவில்லை. கண்து டைப்பு அறிவிப்புகளை செய்யாமல், அரசு  விரைந்து செயல்பட வேண்டும். வாக்குறுதி களை மட்டுமே நம்பி வாழ முடியாது. வாக் குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மீண்டும் போராட்ட களத்திற்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பி.ஜீவா, கே.பி.பாபு, என்.சாந்தி,  எஸ்.மனோன்மணி, மாவட்டச் செயலாளர் எம்.குமார், பொருளாளர்  ஆர்.லாரன்ஸ், எம்.சர ஸ்வதி எம்.சி., சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் வெங்கடேசன், கே.முரளி உள்ளிட்டோர் பேசினர்.