tamilnadu

‘அப்புறம் என்ன...ரேசன் கார்டைக் காட்டி ரூ.50 ஆயிரம் பெற வேண்டியது தான்’ அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை, மே 30- மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும்  சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பொது மக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, முதலமைச்சர் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 வரை யார் வேண்டுமாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஓராண்டில் திரும்பச் செலுத்த வேண்டும் ஏற்கனவே மக்களுக்கு தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்க ளை வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலவாரிய தொழி லாளர்களுக்கு 2,000 வரை உதவித் தொகை வழங்கி உள்ளது.

அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் ரூ.1000 வழங்கி இருந்தது. அத்துடன் விவசாயம், சிறு கடைகள், மற்றும் கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணி களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. முழுயைமான ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டிய நிலைதான் தமிழகத்தில் உள்ளது. ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது. திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்மந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்றோ எந்தப் புகார் மனுவும் இல்லை. பத்து இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.