tamilnadu

மதுரையில் நடப்பது ஆன்மீக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு

மதுரையில் நடப்பது ஆன்மீக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு

பெ. சண்முகம் விமர்சனம்

மதுரை, ஜூன் 7 - “மதுரையில் ஜூன் 22 நடக்க விருப்பது ஆன்மீக மாநாடல்ல, பாஜக வின் அரசியல் மாநாடு!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளி யிட்டுள்ள கருத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரையில் ஜூன் 22 அன்று நடக்கவிருப்பது ஆன்மீக மாநாட ல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு!” என்றும், “மதுரையில் முருக பக்தர்கள்  மாநாடு என்ற போர்வையில் இந்து  சமய நம்பிக்கை உள்ள மக்களை  பாஜக தனது அரசியல் சுயலாபத்திற் காக பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டி யுள்ளார். “இந்தச் சதித் திட்டத்தின் அடிப்படை யிலேயே, பாஜகவின் அகில இந்திய தலைவர் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை இம்மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்கும் வேலையில் தங்களை ஈடு படுத்திக் கொண்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளார். மேலும், “வடஇந்தியாவில் ராமர் கோவில் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். தமிழ்நாட்டில் முரு கனை முன்னிறுத்தி கலவர பூமி யாக்கி ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்கின்றனர்” என்று கூறியிருக்கும் பெ. சண்முகம், “முருகனின் உண்மை யான பக்தர்கள் பாஜக-வின் சதியை புரிந்து கொண்டு இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.