சினிமாவைப் போன்று திகில் காட்சிகள்
“ஒரு முறை மாணிக்கம், நல்லகண்ணு, பாலதண்டாயுதம் ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கிறார்கள். மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர், அதனுடைய செயலாளராக இருந்தவர் தோழர் நல்லசிவன் அவர்களது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். இந்த தகவல் போலீசுக்கு தெரிந்து, போலீஸ் வருவதற்குள்ளாக இவர்கள் இடத்தை மாற்றி ஒரு காட்டுக்குள் புகுந்துவிடுகிறார்கள். வேலிக் கருவை முட்களுக்கிடையே நள்ளிரவில் நடந்து போய் ஒரு காட்டு பங்களாவை கண்டுபிடித்து அங்கு தங்க நினைக்கிறார்கள். ஆனால் அங்கு படுக்க வசதியில்லை. மலைக்குகை போன்ற இடத்தில் தங்குகிறார்கள். எல்லோருக்கும் டீ போட்டுத் தருகிறார் மாணிக்கம் அவர்கள். அப்பொழுது புகை வெளியிலே வருகிறது. அந்தப் புகையானது வெளியில் தெரிந்து ஆடு மேய்க்கும் ஆட்கள் பார்த்து போலீசுக்கு சொல்லி விடுகிறார்கள். போலீஸ் வருவதற்குள் இவர்கள் அங்கிருந்து தலை மறைவாகி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என்று நினைத்து அந்த குகைக்குள் போலீஸ்காரர்களால் வெடிகுண்டு வீசப்படுகிறது. ஆனால் இவர்கள் அங்கிருந்து முன்கூட்டியே சென்று விட்ட காரணத்தினால் குண்டுவீச்சிலிருந்து தப்பித்தனர். இவையெல்லாம் சினிமாவைப் போன்ற திகில் காட்சிகள் என்றால் அது மிகையல்ல.”
சென்னை. மார்ச் 5- சென்னை கலைவாணர் அரங்கத் தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளரக் காரணம் அதனுடைய கொள்கைகள் மட்டுமல்ல, இது போன்ற தன்னலமற்ற தலைவர்களி னால்தான். அத்தகைய மாபெரும் தலை வர்களில் ஒருவர்தான் ப. மாணிக்கம். மிக இளமைக் காலத்திலேயே, போராளியாகத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்தான் மாணிக்கம். 77 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்றால், அதில் ஐம்பது ஆண்டு காலம் பொது வுடைமை இயக்கத்துக்காக - பொது வுடைமைக் கொள்கைக்காகத் தன் னையே அர்ப்பணித்துக் கொண்டி ருக்கிறார். நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை தடை செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள். பொதுவுடமை இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் நட்பு இருக்கிறது. இது கொள்கைப் பூர்வமான நட்பு. கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் நாள் மார்க்ஸூம் எங்கெல்சும் வெளியிட்ட “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யின் 175-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது உங்களுக் கெல்லாம் நினைவிருக்கும். அந்தக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அறிக் கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு கருத்தி யல்ரீதியான ஆசானாக இருந்தவர் பொதுவுடைமைக் கருத்தியலாளர் ம.சிங்காரவேலர் . அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான் நாம் இப்போது ஓர் அணியாகச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறோம்.
இந்த அணியானது ஜனநாயகம் காக்க, சமத்துவத்தை நிலைநாட்ட, சம தர்மத்தைக் காக்க, சுயமரியாதை உணர்வை ஊட்டுவதற்காக, இப்போது போல எப்போதும் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது நம்முடைய ஒற்றுமைக்குக் கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றி. இந்த அரசி னுடைய இரண்டாண்டு காலச் சாதனைகளுக்குக் கிடைத்திருக்கக் கூடிய வெற்றி இந்த இடைத்தேர்தல். ஆனால், அதே நேரத்தில் நமக்கான பெரிய களம் காத்திருக்கிறது. அது தான் நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டைச் சேர்த்து புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். மதவாத - வகுப்புவாத - எதேச்சதிகார சக்திகள் வீழ்த்தப்படவேண்டும். தமிழ்நாட்டைப் போன்ற ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவா னால்தான் வெற்றி பெற முடியும். எனவே, ஒற்றுமையுடன் செயல்படாமல் வெற்றிக் கனியை நாம் பறிக்க முடி யாது. 2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல. அது ஒரு கொள்கை யுத்தம்.
மார்க்சியத்தை விதைப்போம்
மார்க்சின் கொள்கைகள் பிளவு படுத்தும் கொள்கை’ என்றெல்லாம் இந்தக் காலத்தில் சிலரால் சொல்ல முடிகிறது என்றால் அதற்குத் தக்க பதில் சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. சாதி, மதம், இனம், பணம், பால் - என எந்த வேறுபாடும் பார்க்கா மல் அழைக்கும் ‘தோழர்’ என்ற ஒற்றைச் சொல்லை விட ஒற்றுமை மருந்து உண்டா? ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்பதை விட ஒற்றுமை முழக்கம் வேறு இருக்க முடியுமா? ஆந்திராவில் இருந்து வந்து தஞ்சை மாவட்ட உழவர்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சீனிவா சராவ் அவர்கள். இவர்கள் எல்லாம் ஒற்றுமையின் சின்னங்கள் அல்லவா? ஆனால், சாதியின் பேரால் மக்களைப் பிரித்த சனாதனத்தின் ஆதரவாளர்கள், மார்க்ஸை பிளவுவாதி என்கிறார்கள் என்றால், மார்க்சிய கருத்தியலை நாடு முழுவதும் விதைக்கும் கடமை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங் கள் அனைத்திற்கும் இருக்கிறது. நமது இயக்கங்களை நோக்கி வரக் கூடிய இளைஞர்களைக் கொள்கை யில் உரம் பெற்றவர்களாக மாற்றுவது தான் தோழர் ப.மாணிக்கம் போன்ற தியாகிகளுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார். இதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் இ.ஆர். ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், சிபிஐ மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன் ஆகியோரும் பேசினர். முன்னதாக விழா மலரை மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வெளி யிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.