tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

நாகப்பட்டினம், மே 6- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூ ரில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் முன்னிலை யில், வேதாரண்யம் தெற்கு ஒன்றியத் தைச் சார்ந்த பாலசுந்தரம்-நிகிதா இணையர்கள், ஆர்.அருண் அபி னேஷ், பி.திலீபன், க.தினேஷ்ராஜ், க.தனுஷ் ஸ்ரீராம், சே.திராவிட மணி ஆகிய இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்  கொண்டனர். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செய லாளர் வி.அம்பிகாபதி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட னிருந்தனர்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நகரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், மாமேதை காரல் மார்க்ஸ்  பிறந்த தினத்தையொட்டி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியும், தெருமுனைப் பிரச்சாரமும் நகர் முழு வதும் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், தமுஎகச மாநில துணை  பொதுச் செயலாளர் கவிஞர் களப்பி ரன், மாவட்டக் குழு உறுப்பினர் அரு ணாதேவி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கஸ்தூரி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் ஆகியோர் உரையாற்றினர்.  நகரக் கிளை பொறுப்பாளர் அ. வெங்கடேசன், சிஐடியு மாவட்டக் குழு  உறுப்பினர் அய்யப்பன், நகரக் கிளை,  கண்ணந்தங்குடி கிளை, எலந்தவெட்டி கிளை கட்சியினர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் 10 பேரும், மாணவர்கள் 7 பேர் உட்பட 20 பேர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி லட்சுமி நகரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பிற அரசியல் கட்சியி லிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்  கொண்டனர். இதற்கான வரவேற்புக் கூட்டம் லட்சுமி நகரில் மூத்த தோழர் ஜி.ரகுபதி தலைமையில் நடைபெற்றது. நகரக் குழு உறுப்பினர் ஜி.முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். லட்சுமி நகர் செல்வம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு முன்னிலையில் 50 பேர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு செந்துண்டு அணிவித்து வரவேற்று, கே.பி.ஜோதிபாசு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.  கட்சியின் மூத்த தோழர் டி.ஜெகதீ சன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெய பால் உள்ளிட்டோர்  வாழ்த்திப் பேசி னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே.பி.ஜோதிபாசு சிறப்புரையாற்றி னார்.