tamilnadu

img

சிறைமீண்ட திண்டுக்கல் தோழர்களுக்கு வரவேற்பு

சிறைமீண்ட திண்டுக்கல் தோழர்களுக்கு வரவேற்பு

திண்டுக்கல்லில், கடந்த ஜூன் 20 அன்று சிபிஎம் நடத்திய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் போது, பாஜக - இந்து முன்னணி குண்டர்கள் வன்முறையை அரங்கேற்றினர். இதில், பாதிக்கப்பட்ட சிபிஎம் தோழர்களையே காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், புதனன்று மதுரை மத்தியச் சிறையிலிருந்து தோழர்கள் விடுதலையாகினர். அவர்களை சிறைவாயிலில், சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆசாத், அஜாய் கோஷ், கே.ஆர். பாலாஜி உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டத் தலைவர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், இரா. லெனின், வை. ஸ்டாலின் உள்ளிட்ட மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்களும் மாதர், வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கூடி வரவேற்றனர்.