பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டு கழகம், ஜம்புலி எலைட் கிளப் சார்பில் சென்னை கொடுங்கையூரில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் பரிசுகளை வழங்கினார். மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.நித்தியராஜ், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகி ராஜேந்திரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார், வாலிபர் சங்க பெரம்பூர் பகுதி செயலாளர் கார்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜபருல்லா கான், சுபாஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.