தூத்துக்குடி, மார்ச் 16- சரக்குகளை கையாளு வதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இலக்கை எட்டி சாதனை படைத்து உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் “மத்திய கப்பல், துறை முகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், தூத்துக்குடி வ.உ.சிதம்பர னார் துறைமுக ஆணை யத்துக்கு 2022-23-ஆம் நிதியாண்டில் 36 மில்லியன் டன் சரக்குகளை கையாள இல க்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை வ.உ.சி. துறைமுகம் 17 நாட்களுக்கு முன்னதாகவே எட்டி சாதனை படைத்து உள்ளது. இதுவரை 36.03 மில்லியன் டன் சரக்கு களை கையாண்டு உள்ளது.
இது கடந்த நிதியாண்டை விட 11.35 சதவீதம் வளர்ச்சிஆகும். இந்த துறைமுகத்தில் கட்டுமானப் பொருட்கள் 67.41 சதவீதமும், என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்துக் கான நிலக்கரி 63.16 சத வீதமும், சுண்ணாம்புக்கல் 51.72 சதவீதமும், கந்தக அமி லம் 37.34 சதவீதமும், பாமா யில் 35.55 சதவீதமும், தொழி லக கரி 25.08 சதவீதமும், தமி ழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி 12.80 சதவீதமும் கையாளப்பட்டு உள்ளன. மேலும் எளிமையான வர்த்தகத்துக்கான திட்டங் களை நடைமுறைப் படுத்து தல், அதிகரித்துள்ள உள் நாட்டு சரக்கு போக்குவரத்து, மொத்த சரக்கு பெட்டக பரி மாற்றம், பெரியவகை சரக்கு பெட்டக கப்பல்களின் வரு கை, சரக்குத்தள முன்னுரி மை திட்டம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் துறை முக வாடிக்கையாளர்களை தக்கவைத்தல் ஆகிய கார ணிகள் வ.உ.சி. துறைமுக ஆணையம் இந்த சாத னை புரிவதற்கு பெரிதும் உறு துணையாக அமைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.