சென்னை,டிச.5- பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமாகொரே கான் என்ற இடத்தில் எல்கார்பரிஷத் என்ற அமைப்பு நடத்திய தலித்துகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வன்முறை நிகழ்ந்ததாகக் கூறி இச்சம்பவத்தில் நேரடி யாக சம்மந்தப்படாத பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மக்கள் உரிமைப் போரா ளிகள் மீது பொய் வழக்கு தொடுக்கப் பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இவ்வழக்கில் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ் உள்ளி ட்ட பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது.
இவர்கள் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்றுவரையில் ஜாமீன் கூட வழங்கப்படாமல் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களோடு கைது செய்யப்பட்ட அருள்தந்தை ஸ்டான் சுவாமிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும், பாரிச நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு உறிஞ்சிக் குடிக்கும் பாத்திரம் வழங்கப்படாமலும், உடல் நலிவுற்று சிறையிலேயே மரண மடைந்தார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் இயக்கம் நடைபெற்றது. தற்போது இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் அவர்களுக்கு மும்பை உயர்நீதி மன்றம் “டிஃபால்ட் ஜாமீன்” வழங்கி உத்தர விட்டுள்ளது.
ஒரு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள ஒருவர் மீது புலன் விசாரணை நடத்தும் ஏஜென்சி 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் அவருக்கு ஜாமீனில் வெளிவர சட்டப்படி உரிமையுள்ளது. இந்த அடிப் படையில் சுதா பரத்வாஜ் மீது உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யாத காரணத்தால் 2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மிகவும் காலதாமத மாக தற்போதுதான் மும்பை உயர்நீதி மன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ளாத ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய புல னாய்வு ஏஜென்சி உயர்நீதிமன்ற ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் இம்மனு மீது என்ன முடிவு செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒன்றிய அரசு சிறந்த பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள் மீது வழக்கு போட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைத்துள்ளது மட்டுமின்றி உரிய விசார ணையும், குற்றப்பத்திரிகைகளும் இல்லா மல் ஆண்டுக்கணக்கில் இவர்களை ஜாமீ னில் கூட வெளிவர முடியாமல் கொடுமைப் படுத்துவது அராஜகத்தின் உச்சக்கட்ட மாகும். இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து அனைத்து ஜனநாயக உள்ளம் கொண்டவர்களும் குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.