தூத்துக்குடி, ஜூன் 23- தூத்துக்குடியில் மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சி யில் 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர். அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடியில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும் ஜிப்சம் உள்ளிட்டப் பொருள்களை எடுக்க வும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. கழிவுகள் அகற்றப்படாவிட்டால் உப கரணங்கள் பாதிக்கப்படும் என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. எனி னும், இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேப ணை தெரிவித்தது. இந்த நிலையில், தூத்து க்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவு களை தமிழக அரசே அகற்ற முடிவு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு அகற்றினாலும் அதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க அரசு உத்தரவிட்டது.
ஆலையில் உள்ள இயந்திரங்களை அகற்றுவது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிரா கரிக்கப்பட்டுள்ளது. ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. 9 பேர் கொண்ட இந்த குழுவில் துணை காவல் கண்காணிப்பாளர், தொழில் மாசு கட்டுப்பாடு, தீ அணைப்பு, மாநகராட்சி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளதை தொட ர்ந்து ஆலைக் கழிவுகளை வெளியேற்று வதற்கான பணிகள் தொடங்கியது. கடந்த 21ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் எடுப்பதற்கான பணி கள் தொடங்கிய நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிகளாக இருந்த ஜிப்சம் தூளாக்கப் பட்டது. தற்போது ஜூன் 23 ஆம் தேதி லாரிகள் மூலம் வெளியேற்றம் செய்வது தொடங்கியது. முதற்கட்டமாக ஆந்திராவில் உள்ள இந்தியா சிமெண்ட் தொழிற்சாலைக்கு ஒரு லாரி ஜிப்சம்.விருதுநகர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலைக்கு மூன்று லாரி ஜிப்சம் ஆக மொத்தம் 180 மெட்ரிக் டன் கொண்டு செல்லப்படுகிறது.