tamilnadu

img

இந்த எதிர்ப்பு அலை தமிழகத்திலும் நாடெங்கும் எழும்: திருச்சி சிவா

திருவனந்தபுரத்தில் நடை பெற்ற பேரணியில் பேசியதாவது: திருவனந்தபுரமே குலுங்கும் அளவுக்கு இந்த பேரணி நடந்தி ருக்கிறது. எந்த திசையை பார்த்தா லும் செங்கொடியுடன் மக்கள் வெள்  ளம். உணர்ச்சிமயமான மக்கள் எல்லா திசைகளில் இருந்தும் ஆளு நர் மாளிகை நோக்கி வந்திருக்கி றார்கள். ஒரு தனி மனிதர் ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு ஒரு லட்சம் மக்களை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்திய நாட்டின் ஜன நாயகம் ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் அடிப்படையானது கூட்  டாட்சி தத்துவம். மத்திய அரசல்ல  ஒன்றிய அரசு என்பதே சரியானது. அப்படி சொல்கிறபோதுதான் ஒட்டு மொத்த அதிகாரம் படைத்தவர்கள் அல்ல பல்வேறு மாநிலங்களின் தொகுப்பு அளித்துள்ள அதிகாரம் பெற்றிருப்பவர்கள் என்கிற உண்மை புரியவரும். ஒன்றிய அரசு என்ன நினைக்கி றதோ அதை நிறைவேற்றுகிறவர் களை மாநில ஆளுநர்களாக பெற்றி ருக்கிறோம் என்பதே வேதனை யின் உச்சம். ஆளுநர்கள் ஒன்றிய அரசுக்கு மாறான அரசு நடக்கும்  இடங்களில் எப்போது சந்தர்ப்பம்  கிடைக்கும் என காத்திருக்கிறார் கள். நடைபெறும் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் அவர்களுக்கு சாதகமான மற்றொரு அரசாக மாற்ற வேண்டும் என செயல்படுகிறார்கள். இதுவல்ல அவர்களது பணி. இன்று  நீங்கள் எடுத்திருப்பது பல்கலைக் கழ கங்களை பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கை. ஆனால் இது மட்டும் அல்ல பிரச்சனை. தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20  மசோதாக்கள் ஆளுநர் மாளிகை யில் கிடப்பில் உள்ளது.

உங்களைப் போன்றது தான் எங்  களது நிலைமையும். தமிழக அர சுக்கு தெரியாமலே பல்கலைக் கழக  துணை வேந்தர்களின் மாநாட்டை ஆளுநர் உதகையில் கூட்டுகிறார். இது மரபு அல்ல. ஆளுநர் சென்னை திரும்புவதற்குள் பல்கலைக் கழக  துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே வேண்  டும் என 2 தீர்மானங்களை நிறைவேற்  றுகிற துணிச்சல் எங்களுக்கு அங்கே  இருக்கிறது. நீங்களும் அதுபோல் தைரியமாக பேசுகிறீர்கள். இந்த  ஆளுநர் வேண்டாம் என சொல்கிற  உரிமை மாநில அரசுக்கு உள்ளது.  ஆளுநரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்கிற ஒரு மனுவை நாங்கள் குடியரசு தலைவரிடம் கொடுத்திருக்கிறோம். ஒரு நாடு என்பது ஒரு மதம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்  கிற சித்தாந்தத்துடன் வருகிறார் கள். இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. ஆளுநர்கள் தங்கள் கடமை யை மறந்து இப்படியெல்லாம் செய்  கிறபோது மக்கள் தங்களது வேலை களை விட்டுவிட்டு ஒன்றாக வீதிக்கு  வரும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்  பட்ட ஆளுநர் பதவியே தேவை யில்லை என்பதுதான் நமது நிலைப்  பாடாக இருக்க வேண்டும். எல்லா  அமைப்புகளையும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஒன்றிய பாஜக அரசு, இன்று ஆளு நர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடிந்த அளவுக்கு இடையூறு செய்கிறார்கள். மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  படுகொலையில் சம்மந்தப்பட்ட தாக கருதப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருப்போரை விடு தலை செய்ய தமிழக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் நீண்டகாலம் கிடப் பில் போடுகிறார் ஆளுநர். இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மாநில  அரசு நிறைவேற்றி அனுப்பும் தீர்மா னத்தை கிடப்பில் போட ஆளு நருக்கு அதிகாரம் இல்லை எனக்  கூறி அரசமைப்பு சாசனம் 142 இன் கீழ் அவர்களை விடுதலை செய்தி ருப்பது இந்த நாட்டின் அரசியல் வர லாற்றில் முக்கியமான காலகட்டம். இது முக்கியமான ஒரு தீர்ப்பாகும். நீதிமன்றம் இருக்கிறது இன்னமும் நமது நம்பிக்கைக்கு. ஒன்றியத்தில் இருக்கும் அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. மாநில அரசு செய்யும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். நம்மை பிரித்தாள நினைக்கிறார் கள். ஒற்றைத் தன்மை கொண்ட  அதிகாரத்தின் மூலம் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு ஆளுநர்கள் துணைபோகி றார்கள். இந்த நிலை தொடர்ந்தி டக்கூடாது. அரசமைப்பு சாசனத்தை  வலுப்படுத்த மறு ஆய்வு செய்யப்  பட வேண்டும். அவர்கள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில  சுயாட்சிதான் திமுகவின் நிலைப் பாடு. நாம் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறோம் என்பதற்குதான் இன்றைக்கு திருவனந்தபுரம் குலுங்  கும் அளவுக்கு மாபெரும் பேரணி நடந்திருக்கிறது. இந்த எதிர்ப்பு அலை தமிழகத்திலும் நாடெங்கும் எழும் என்றார்.