tamilnadu

img

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி

கும்பகோணம்,ஜூலை 15-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கல்வி வியாபாரத் தீயினால் வெந்து மடிந்த 94 குழந்தைகளுக்கு, இந்திய மாணவர் சங்க, மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி தஞ்சாவூரில் கிளை சார்பாக வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செய லாளர் கு.சந்துரு, மாவட்டத் தலைவர் அர்ஜுன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.  நினைவிடத்தை சீரமைக்க கோரிக்கை கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந் தைகள் இறந்து சாம்பலா கின. இறந்த குழந்தைக ளின் நினைவாக கும்பகோ ணம் பாலக்கரை அருகில் மாநகராட்சி சார்பில் நினை விடம் அமைக்கப்பட்டு, பூங்காக்கள்-விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங் களுடன் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டது. ஆனால் தற்போது நினை வுச் சின்னம் பொலிவிழந்து, குப்பைகள் நிறைந்த பகுதி யாக பராமரிப்பின்றி இருக்கி றது. இதனை தூய்மைப் படுத்தி தொடர்ந்து பராம ரிக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற் குழு உறுப்பினர் அன்புமணி, மாவட்ட துணைசெயலாளர் பிரதீப், மாவட்ட குழு உறுப்பி னர் கோபி விஜயாலன் ஆகி யோர் கும்பகோணம் மாநக ராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

;